
பழமொழிகள்
பழமொழிகள் tnpsc 6th to 12th old and new (fully covered)
பொருத்துக:
தமிழ் பழமொழியை ஆங்கிலத்தில் மாற்றுக
பழமொழி வாழ்க்கை நிகழ்வு 1. பழமொழியை தொல்காப்பியம் 'முதுசொல்' என்று கூறுகிறது. 2. பழமொழி நம் வாழ்க்கை முறையில் பெறும் முக்கியத்துவங்கள். i. தமிழர்களின் பண்பாட்டோடும் கலாச்சாரத்தோடும் நெருங்கிய தொடர்புடையது பழமொழி. II. பழமொழிகள் மூலம் தமிழர்கள் நற்பண்புகளையும் நல்ல வாழ்வியல் முறைகளையும் கற்றுக் கொண்டனர். iii. பழமொழிகள் சுருக்கமாக இருந்தாலும் அரிய வாழ்வியலை எடுத்துக்கூறி நல்வழிப்படுத்தும். 3. பழமொழி என்பது சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் ஆகும். 4. ஒரு சமுதாயத்தில் நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகளைப் பழமொழி என்பர். 5. ஒரு கருத்தை, பொருளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் சுவையாகவும் விளக்குவன பழமொழிகள். 6. மக்களின் நீண்ட கால வாழ்வியல் அனுபவத்தின் வெளிப்பாடுகளைச் சுருக்கமாகச் சொல்வதே பழமொழியாகும். 7. பழமொழிகளைக் கொண்டு பழமொழி நானூறு என்னும் நீதி நூல் படைக்கப்பட்டுள்ளது. 4. வாழ்வியல் பழமொழிகள்: i. ஆசைக்கு அளவில்லை ii. பேராசைக்கு இல்லை இரக்ககுணம் III. நல்ல அறிவுரை விலைமதிப்பற்றது iv. உழைக்க கற்றபின் பொறுக்கக் கற்க இவ்வாறு பழமொழி மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 5. கிராமப் புறங்களில் ஒரு சில செய்கையைக் குறிக்கவும், அதன் மூலம் கருத்துச் சொல்லவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நம் முன்னோர்கள் பழமொழிகளைச் சொல்லி வந்தனர். 6. பழமொழி என்பது ஒரு செயலுக்கு விளக்கம் தரவும், அனுபவத்துடன் சேர்ந்து அறிவுரை தரவும் சொல்லப்படுகிறது. ஆனால் தற்பொழுது பல பழமொழிகளுக்கு அதற்குரிய பொருள் சொல்லப்படாமல் நாளடைவில் மருவி வேறு ஏதோ பொருள் சொல்லப்படுகிறது. சான்று: புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து, உண்மைப் பொருள்: புண்பட்ட மனதை புக விட்டு ஆற்று. மனம் புண்பட்டு இருக்கும் போது தமக்குப் பிடித்த வேறு ஒரு செயலில் மனதைப் புக விட்டு ஆற்றிக்கொள்ள வேண்டும் என்பதே சரி. 7. "தன் கையே தனக்கு உதவி" விளக்கம்: ஒரு பணியைச் செய்வதற்குப் பிறரை நம்பாமல் தன்னை மட்டுமே நம்புவது சிறப்பு. 8. "இளங்கன்று பயம் அறியாது" விளக்கம்: இளமைப் பருவத்தினர், தனக்குப் பின்னால் நேரக்கூடிய துன்பத்தினைப் பற்றிய பயம் அறியாமல் தற்போது உடனே ஒரு முடிவினை எடுத்து விடுவர். அது பேராபத்தாய் கூட முடிந்து விடும். 9. "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா" பொருள்: இளமையில் கல்வி கற்காதவன் முதுமையில் கல்வி கற்பது என்பது முடியாத காரியம் ஆகும் அதுபோல இளமையில் முயற்சி செய்யாதவன் முதுமையில் முயற்சி செய்ய முடியாது என்பதை இப்பழமொழி உணர்த்தும் பொருளாகும். 11. "மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" விளக்கம் : ஆற்றின் நடுவே உள்ள மண் திட்டுகளை நம்பி, ஆற்றுக்குள் இறங்கக்கூடாது. அவை, நீர் ஊறிய மண்மேடுகள் என்பதால் காலை வைத்தவுடன் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். இதையே மேற்கண்ட பழமொழி எடுத்துக்காட்டுகிறது. (குறிப்பு-மண்குதிர்- மண்மேடு/ மண்திட்டு) 12. "குந்தித் தின்றால் குன்றும் மாளும்" என்பதுபோல குமரன் தன் தந்தை சேமித்து வைத்த பெருஞ்செல்வத்தை, உழைக்காமலே செலவழித்து வறியன் ஆனான். 13. பழமொழி எவ்வாறு வாழ்க்கை நிகழ்வோடு பொருந்துகிறது என்பதை ஒரு சில எழுத்துக்காட்டு i. வாய்மையே வெல்லும் ii. இளங்கன்று பயம் அறியாது iii. எறும்பு ஊரக் கல்லும் தேயும் iv. 'போதும்' என்ற மனமே பொன் செய்யும் மருந்து. V. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு. vi. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் vii. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். மொழியை ஆள்வோம்: 1. பழமொழியின் சிறப்பு சொல்வது? சுருங்கச் 2. நோயற்ற வாழ்வை த் தருவது? சுத்தம் 3. உடல் ஆரோக்கியமே அடிப்படை? உழைப்பு 4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை? உணவு, உடை, உறைவிடம் 5. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக? சுத்தம் பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க. 1. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல படிக்கும் நல்லார் சொன்ன அறிவுரை தீயவருக்கும் போய் சேர்ந்தது. 2. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும். தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் போலப் பிறர் கூறும் அறிவுரை கடினமானாலும் அது நம்மை நல்வழிப்படுத்தும். 3. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும். மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் போல கடினமான செயலையும் விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி பெற முடியும் 4. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது போல பிறருக்கு நாம் சொல்லிக் கொடுப்பதால் நம்முடைய அறிவானது குறைபடாது. பாடலில் அமைந்துள்ள பழமொழி "துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது" என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்? அ) நிழலின் அருமை வெயிலில் தெரியும். ஆ) சிறு துரும்பும் பல்குத்த உதவும். Answer: நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற பழமொழிக்கு இப்பாடலடிகள் பொருந்தும். விளக்கம்: குகனின் வருத்தத்தை உணர்ந்த இராமன் கூறியது. துன்பம் என்று ஒன்று இருந்தால் இன்பம் என்பது புலப்படும் என்பதே பொருத்தம். வட்டத்திலுள்ள பழமொழிகளைக் கண்டுபிடித்து எழுதுக.
கல்வி குறித்து வழங்கப்படும் பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.
'ஆனாலும்' என்னும் இணைப்புச் சொல்லைப் பயன்படுத்திப் பழமொழிகளை எழுதுக. (எ.கா.) கந்தையானாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி. 1. எலி வளையானாலும் தனி வளை வேண்டும். 2. ஓட்டைச் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி. 3. ஒடிந்தகோல் அனாலும் ஊன்றுகோல் ஆகும். 4. கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும். 5. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும். பழமொழி அறிவோம்: 1. புண்ணுக்கு மருந்து போட முடியும்; புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா? 2. அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது. 3. வெளைச்சலுக்கும், வெள்ளாட்டுக்கும் சென்மப் பகை. 4. எறும்பு ஊரக் கல்லும் தேயும். 5. உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலை போகும். 6. குடல் கூழுக்கு அழுவுதாம், கொண்டை பூவுக்கு அழுதாம். 8. நல்ல பாம்பு படம் எடுக்கலாம்; நாக்கலாம் பூச்சி படம் எடுக்கலாமா? 9. ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும். 10. ஆள் கூடுனா பாம்பு சாகுமா? கைய ஊனித்தான் கரணம் போட முடியும். 11. காவடிப்பாரம் சுமக்கிறவனுக்குத்தான் தெரியும். 12. இருப்பவனுக்கு புளியேப்பம்; இல்லதாவனுக்கு பசியேப்பம். 13. நாலு வீட்டில கல்யாணமாம். நாய்க்கு அங்கேயும் இங்கேயும் ஓட்டமாம். 14. அவ்வப்பொழுது போக்குவதிலும் வீணாகப் பொழுது போக்குதல் தவப்பொழுது நல்லதும்பாங்க. 15. பாடிப்பாடிக் குத்தினாலும் பதரு அரிசி ஆகுமா? 16. அதிர அடிச்சா உதிர விளையும். 17. குத்துக்கல்லுக்கு என்ன குளிரா வெயிலாங்கிற மாதிரி. 18. அகழியில் விழுந்நத முதலைக்கு அதுவே சொர்க்கம். 19. கார்த்திகை மாசம் பிறைய கண்ட மாதிரி. 20. அதை விட்டாலும் கதி இல்ல, அப்பால போனாலும் விதி இல்ல. 21. தட்டிப் போட்ட ராட்டிக்குப் புரட்டிப் போட ஆளு இல்லாம. 22. அள்ளுறவன் பக்த்துல இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்துல இருக்கக் கூடாது. 23. அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்குப் போன இடமெல்லாம் வழிதான். 24. குத்துக்கல்லுக்குக் குளிரா வெயிலா கவலையில்லாமல் வாழ்தல். தொடரைப் பழமொழிகொண்டு நிறைவு செய்க. 1. இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து 2. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் 3. கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே 4. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு 5. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல. (நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல படிக்கும் நல்லார் சொன்ன அறிவுரை தீயவருக்கும் போய் சேர்ந்தது.) 6. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும். (தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் போலப் பிறர் கூறும் அறிவுரை கடினமானாலும் அது நம்மை நல்வழிப்படுத்தும்) 7. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும். (மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் போல கடினமான செயலையும் விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி பெற முடியும்) 8. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது (கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது போல பிறருக்கு நாம் சொல்லிக் கொடுப்பதால் நம்முடைய அறிவானது குறைபடாது.) பழமொழிகளை நிறைவு செய்க. 1. உப்பில்லாப் ………………………. விடை : உப்பில்லாப் பண்டம் குப்பையிலே 2. ஒரு பானை …………………….. விடை : ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் 3. உப்பிட்டவரை ………………………… விடை : உப்பிட்டவரை உள்ளளவும் நினை 4. விருந்தும் ……………………… விடை : விருந்தும் மருந்தும் மூன்று வேளை 5. அளவுக்கு ………………………… விடை : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு பின்வரும் பழமொழிகளை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக. 1. யானைக்கும் அடிசறுக்கும்
2. தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்
3. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
4. எறும்பு ஊரக் கல்லும் தேயும்
5. ஊழி பெயரினும் தாம் பெயரார்.
உரிய எழுத்துகளை நிரப்பிப் பழமொழிகளை உருவாக்குக. 1. இறக்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்கும் சிறகு. (று, ற) 2. எறும்புக்குத் தெரியாத கரும்பு இல்லை. (று, ரு ) 3. அரண்மனை உறவைக்காட்டிலும் அடுக்களை உறவு மேல். (ற, ர) கீழ்க்காணும் பழமொழிகளில் விடுபட்ட இடங்களில் குற்றியலுகரச் சொற்களாக வரும்படி எழுதுக. அச்சொற்களைக் கட்டத்தில் நிரப்புக. இடமிருந்து வலம் 1. போதுமென்ற மனமே பொன் செய்யும் ________. விடை: மருந்து 4. ஆத்திரக்காரனுக்குப் புத்தி ________. விடை: மட்டு 8. ஏற்றம் உண்டானால் இறக்கமும் ________. விடை: உண்டு 9. காலம் பொன் ________. விடை: போன்றது வலமிருந்து இடம் 5. கெடுவான் _______ நினைப்பான். விடை: கேடு மேலிருந்து கீழ் 2. அகத்தின் _______ முகத்தில் தெரியும். விடை: முகத்தில் 3. _______ சிறுத்தாலும் காரம் குறையாது. விடை: கடுகு 6. அடியாத _______ படியாது. விடை: மாடு 7. அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் _______. விடை: நஞ்சு கீழிருந்து மேல் 10. ஆற்றில் போட்டாலும் _______ போடு. விடை: அளந்து தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க. 1. இளமையில் கல்வி முதுமையில் இன்பம். 2. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம். 3. கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே. 4. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. அறிஞர்களின் பொன்மொழிகளைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுக 1. Every flower is a Soul blossoming in nature – Gerard De Nerval மொழி பெயர்க்க : எல்லாப் பூக்களும் இயற்கையில் உயிருடன் இருக்கிறது. பழமொழி : மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு. 2. Sunset is still my favourite colour, and rainbow is second – Mattie Stepanek மொழி பெயர்க்க : சூரிய அஸ்தமனமே முதலில் எனக்குப் பிடித்த வண்ணம், வானவில்லின் வண்ணம் அடுத்த நிலை தான். பழமொழி : தோல்வியே வெற்றிக்கு அடிப்படை (அ) ஒன்றன் மறைவில் இருந்தே புதியன தோன்றும். 3. An early morning walk is a blessing for the whole day – Henry David Thoreau மொழி பெயர்க்க : அதிகாலை நடைப்பயிற்சி அந்நாளுக்கே ஒரு வரமாகும். பழமொழி : நன்றாய்த் தொடங்கும் செயல் நன்றாகவே முடியும். (அ) சிறந்த தொடக்கமே வெற்றிக்கு அடிப்படை. 4. Just living is not enough …. one must have sunshine, freedom and a little flower – Hans Christian Anderson Answer: மொழி பெயர்க்க : வெறுமையான வாழ்வு மட்டும் போதாது ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி, ஆற்றல், விடுதலை மலர் என இருத்தல் வேண்டும். பழமொழி : இலட்சியமுள்ள வாழ்வே சிறந்த வாழ்வாகும், வெறும் வாழ்வு வீணே. பொன்மொழிகளை மொழி பெயர்க்க. 1. A nation’s culture resides in the hearts and in the soul of its people -Mahatma Gandhi நம் நாட்டினுடைய பண்பாட்டினை மக்கள் அனைவரும் தம் இதயங்களிலும், ஆத்மாவிலும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும். 2. The art of people is a true mirror to their minds – Jawaharlal Nehru மக்களின் கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. 3. The biggest problem is the lack of love and charity – Mother Teresa அன்பு செலுத்துதல், தர்மம் செய்தல் இவற்றின் குறைபாடே, மிகப்பெரிய பிரச்சனையாய் உள்ளது. 4. You have to dream before your dreams can come true – A.P.J. Abdul Kalam உங்கள் கனவு நனவாகும் வரை, கனவு காணுங்கள். 5. Winners don’t do different things; they do things differently – Shiv Khera வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை மாறாக ஒவ்வொரு செயலையும் வித்தியாசமாக செய்கிறார்கள். |