
வீரமாமுனிவர் 1. காலம் – 1680 – 1747 2. பிறந்த ஊர் – இத்தாலி 3. இயற்பெயர் – கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி 4. தேம்பாவணி காப்பியத்தை இயற்றியவர் – வீரமாமுனிவர். 5. தமிழ் எழுத்துகளில் மிகபெரிய சீர்திருத்தத்தை செய்தவர் – வீரமாமுனிவர். 6. ஒகரம் எகாரதில் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் – வீரமாமுனிவர். 7. எழுத்துகளில் புள்ளியால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் –வீரமாமுனிவர். 8. திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர். 9. வீரமாமுனிவர் அவருடைய 30 -ஆம் அகவையில் சமயத் திருப்பணியாற்ற தமிழகத்துக்கு வந்தார். 10. வீரமாமுனிவர் தமிழ் பற்றினால் முதலில் மாற்றிய பெயர் – தைரியநாதர். 11. தைரியநாதர் என்ற பெயரைத் தனித்தமிழாக்கி மாற்றிய பெயர் – வீரமாமுனிவர். 12. வீரமாமுனிவர் தமிழில் முதன்முதலாக வெளியிட்டது – சதுரகராதி (அகரமுதலி). 13. தமிழ் எழுத்து வரிவடிவத்தைத் திருத்தி, எழுத்து சீர்த்திருத்தம் மேற்கொண்டவர் – வீரமாமுனிவர். 14. வீரமாமுனிவர் இயற்றிய சிற்றிலக்கியங்கள் – கலம்பகம், அம்மானை. 15. பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலை எழுதியவர் – வீரமாமுனிவர். |
Useful Links
• TNPSC Group 4 Study Material Syllabus Wise 2025