மரபுத் தொடரின் பொருளறிதல்

மரபுத் தொடரின் பொருளறிதல்

மரபுத் தொடரின் பொருளறிதல்


உவமைத் தொடர்பொருள் 
தலையில் வைத்துக் கொண்டாடுதல்அளவு கடந்து பாராட்டுதல் / பெரிதும் மதித்தல்
கிடைக்காத ஒன்றுகானல் நீர்
இமாலயத்தவறுபெரிய தவறு
துன்பத்திலிருந்து மீளுதல்கரையேறுதல்
பஞ்சாகப் பறத்தல்அலைந்து திரிதல்
ஆகாயத்தாமரைஇல்லாத ஒன்று
ஏமாற்று வேலைபித்தலாட்டம்
எதிர்நீச்சல்நீரோட்டத்தை எதிர்த்து நீந்துதல்/ போக்கை எதிர்த்துப் போராடுதல்/ வால்களைச் சமாளித்து முன்னேறுதல்
சொந்தக்காலில் நிற்றல்
அகலக்கால் வைத்தல்சக்திக்கு மீறிப் போதல்
அம்பலப்படுத்துதல்பலரும் அறியச் செய்தல்
அமளி துமளிகூச்சலோடு கூடிய குழப்பம்
அலைக்கழித்தல்அலைத்து வருத்துதல் / இழுக்கடித்தல் 
ஆட்டங்காணுதல்வலுவற்ற / உறுதியற்ற நிலை
ஆலாப்பறத்தல்தேடி அலைதல்
ஆழம் பார்த்தல்ஒருவரின் உண்மை நிலையை அறிதல்
ஈடுகொடுத்தல்சரிக்குச்சமம் / சமாளித்தல்
ஈரமின்றிஇரக்கமில்லாமல்
உப்புச்சப்பின்றிஆர்வமூட்டாத
உருக்குலைதல்வடிவம் சிதைதல் / உடல் மெலிதல்
ஊருக்கு உபதேசம்தான் கடைப்பிடிக்காமல் பிறருக்கு மட்டும் வழங்கும் அறிவுரை
கட்டுக்கோப்புஉறுதியான பிணைப்பு / ஒன்றிணைந்து
கடன் கழித்தல்வேண்டாவெறுப்பாகச் செய்தல் 
கண்ணாயிருத்தல்சிதறாத கவனத்துடன் இருத்தல் / குறியாக இருத்தல் / முழுக்கவனத்துடன் இருத்தல்.
கண்துடைப்புநம்பவைப்பதற்கான போலித்தனமான சொல் / செயல்
கரைபுரளுதல்அளவு கடந்து வெளிப்படுதல் (மகிழ்ச்சி, திறமை)
காற்றாய்ப்பறத்தல்மிக வேகமாகப் போதல் / வருதல்
குரல்கொடுத்தல்ஆதரவு தெரிவித்தல் 
கூழைக்கும்பிடுபோலியான மரியாதை
கை ஓங்குதல்செல்வாக்கு மிகுதல்
கைச்சுத்தம்நாணயம், நேர்மை
கைதூக்கிவிடுதல்ஒருவரை முன்னேற்ற உதவுதல்
சரிகட்டுதல்இணங்கவைத்தல் / ஈடுசெய்தல்
சரமாரியாகஅடுத்தடுத்து, தொடர்ந்து
சொந்தக்காலில் நிற்றல்சொந்த உழைப்பில் நிற்றல்
சொல்லிக்காட்டுதல் செய்த உதவியைச் சுட்டிக்காட்டுதல் / குத்திக்காட்டுதல்
தலைகாட்டுதல்சிறிது நேரமே தோன்றுதல் 
தலைசாய்த்தல்சற்று ஓய்வெடுத்தல்
தலைதெறிக்கமிகவேகமாக
தலையில் கட்டுதல்வலிந்து திணித்தல் / விரும்பாத ஒன்றை ஒப்புக்கொள்ளச் செய்தல் / பயனற்ற ஒன்றை ஏற்கச் செய்தல்
தலையில் வைத்துக் கொண்டாடுதல்அளவு கடந்து பாராட்டுதல்
தாளம் போடுதல்எல்லாவற்றிற்கும் ஒத்துப்போதல் / மிகவும் திண்டாடுதல்
நடைப்பிணம்பிணத்தைப் போல உணர்வற்ற நிலை
நிறைகுடம்அறிவிலும் பண்பிலும் சிறந்தவர் ஆனால் அடக்கமானவர்
நீர்க்குமிழிநிலையற்றத்தன்மை
படியவைத்தல்அடங்கி நடக்கும்படி / அடங்கச்செய்தல் 
பூசிமெழுதல்மூடிமறைத்தல்
மதில் மேல்பூனைமுடிவெடுக்கப்படாத குழப்பமான மன நிலை.
முதுகெலும்பு இல்லாதிருத்தல்விருப்பப்படி செய்யத் துணிவில்லாதவன்
முழுமூச்சுமிகத்தீவிரம்
மெய்ம்மறத்தல்ஒன்றில் ஆழ்ந்து இருத்தல்
வலைவீசுதல்தேடிக் கண்டுபிடிக்க முனைதல் / ஒருவரை வசப்படுத்த முயலுதல்
வாய்ப்பூட்டுப் போடுதல்சுதந்திரமாகக் கருத்துக்களைக் கூறத் தடைவிதித்தல்
வாயடைத்துப்போதல்அதிர்ச்சியால் / ஆச்சரியத்தால் பேசமுடியாமல் போதல்
வாரி இறைத்தல்வரையறையின்றிக் கொடுத்தல் / அளவின்றிக் கொடுத்தல் 
விடிவுகாலம்நல்ல காலம் / நல்ல முடிவு ஏற்படுதல்
விரலுக்குத் தகுந்த வீக்கம்அவரவர் தகுதிக்கு ஏற்ற செயல்
வெளுத்துவாங்குதல்சிறப்பாகச் செய்தல் / பலமாக அடித்தல்
அகமும் முகமும்உள்ளமும் முகமும்
அகலாமல் அணுகாமல்அதிகமாக விலகாமலும் நெருங்காமலும் இருத்தல்
அடியும் நுனியும்ஆரம்பமும் முடிவும்
ஆக்கமும் ஊக்கமும்பயன்முனைப்பும் உழைப்பும்
ஆட்டமும் பாட்டமும்எதைப்பற்றியும் சிந்திக்காமல் ஆட்டமும் பாட்டுமாக இருந்தல்
ஆய்ந்து ஓய்ந்துவேலைமிகுதியால் களைத்து 
ஒப்பாரும் மிக்காரும்இணையானவரும் மிஞ்சியவரும்
குற்றங்குறைசிறிதும் குறை காண முடியாதவர் 
கேட்பாரும் மேய்ப்பாரும்தட்டிக்கேட்பவரும் அடங்கி நடக்கச் செய்பவரும்
சொல்லும் செயலும்சொல்லும் கருத்தும்
நாடி தேடிவிரும்பிதைச் தேடிச் செல்லுதல்
நாடி நரம்புஇரத்தம் செல்லும் நரம்பு
பழியும் பாவமும்செய்த தவறால் எற்படும் அவப்பெயரும் பின்விளைவுகளும்
பட்டும் படாமலும்தனக்குத் தொடர்பு இல்லாதது போல் பேசுதல் 
பேரும் புகழும்பெருமையும் சிறப்பும்
மலைக்கும் மடுவுக்கும்வேறுபாட்டைக் கூறுவது. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்
மாலை மரியாதை மிகுந்த மரியாதை கொடுப்பது
வாட்டி வதைத்துமிகுந்த துன்பப்படுத்துதல் 
வாழ்விலும் தாழ்விலும்ஏற்றத்திலும் இறக்கத்திலும்


மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

1. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.
விடை: 
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்.

2. கயல் பானை செய்யக் கற்றுக் கொண்டான்.
விடை: 
கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள்.

3. நேற்று தென்றல் காற்று அடித்தது.
விடை: 
நேற்று தென்றல் காற்று வீசியது.

4. தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார்.
விடை: 
தென்னை மட்டையிலிருந்து நார் உரித்தனர்.

5. அணில் பழம் சாப்பிட்டது.
விடை: 
அணில் பழம் கொறித்தது.

6. கொடியிலுள்ள மலரை எடுத்து வா.
விடை: 
கொடியிலுள்ள மலரைப் பறித்து வா.

கூவும் குயிலும் கரையும் காகமும் - தொடரில் இடம்பெற்ற மரபு

அ) பெயர்மாபு

ஆ) வினைமரபு

இ) ஒலிமரபு

ஈ) இவை மூன்றும்

மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

(சான்று) – எதிர் நீச்சல் 
வாழ்க்கையில் எத்தனை தோல்விகள் ஏற்பட்டாலும், அவற்றைக் கடந்து 
எதிர்நீச்சல் போட்டு, வெற்றி பெற வேண்டும்.

1. சொந்தக்காலில் நிற்றல் : தனக்கு எவரேனும் பொருளுதவி செய்வார்கள் என எதிர்பார்க்காமல், வேலவன் பள்ளியில் படிக்கும்போதே சிறுசிறு பணிகளைச் செய்து, பொருளீட்டித் தன் தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொண்டு, 
சொந்தக்காலில் நிற்கப் பழகிக் கொண்டான்.

2. தாளம் போடுதல் : அரசியலில் மாறிமாறிக் கூட்டணி அமைக்கும் தலைவர்கள், தங்கள் கூட்டணித் தலைவர்களின் கூற்றுகளையெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல், 
தாளம் போடுதலை நாம் காண்கிறோம்.

3. மதில்மேல் பூனை : தேர்வு நெருக்கத்தில் மட்டுமே படித்துத் தேர்வு எழுதுவோர், தேர்வு முடிவு வெளிவரும்போது, 
மதில்மேல்பூனைபோல் மன அழுத்தத்தில் திண்டாடுவர்.

4. நிறைகுடம் : நன்றாக, தெளிவுபடக் கற்றறிந்த சான்றோர், 
நிறைகுடம்போல் அமைதியாக இருப்பர்.

5. கைதூக்கிவிடுதல் : ஊர்தோறும் பள்ளிகளைத் திறந்து, கல்வி கற்பித்து, மக்களைக் 
கைதூக்கிவிடக்
காமராசர் பாடுபட்டார்.

6. கண்ணாயிருத்தல் : இளையோர், மாணவப்பருவத்தில் கல்வி கற்பதில்மட்டுமே 
கண்ணாயிருத்தல்
வேண்டும்.

7. அவசரக்குடுக்கை: மக்களிடம் ஓரளவுக்கு அறிமுகமானவுடனே தன்னைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்து விடுவர் எனச் சிலர் 
அவசரக்குடுக்கைபோல் செயல்பட்டு, மூக்கறுபட்டுத் தோல்வி காண்பது உண்டு.

8. 
முதலைக் கண்ணீர் : தேர்தல் நெருங்கும் நேரத்தில் சிலர், மக்கள் படும் துன்பங்களுக்காகத் தாம் போராடப் போவதாகப் பேசி, முதலைக்கண்ணீர் வடிப்பது உண்டு.

9. கானல்நீர் : முதியோர் இல்லத்தில் மகனால் சேர்க்கப்பட்டபோது, தங்கள் எதிர்கால வாழ்க்கை
கானல் நீராகிப் போனதைப் பெற்றோர் உணர்ந்தனர்.

மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

1. ஆற அமர
ஒரு செயலை செய்யும் முன் “ஆற அமர” யோசித்து செயலை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

2. ஆணி அடித்தாற் போல
நமது தேசிய கீதம் பாடும் போது மரத்தில் “ஆணி அடித்தாற் போல” அசையாமல் நிற்க வேண்டும்.

3. அகலக்கால்
தொழில் தொடங்கு முதன் சிந்தித்து “அகலக்கால்” வைக்காமல் சிறிய முதலுடன் தொடங்க வேண்டும்.

4. வழிவழியாக
தமிழர்களின் பண்பாடு “வழிவழியாக” பல தலைமுறைகளாக வளர்ந்தவை.

5. கண்துடைப்பு
தேர்தலில் பல வாக்குறுதிகளை கொடுக்கும் அரசியல்வாதிகள், வெற்றி பெற்ற பின் “கண்துடைப்பாக” ஒரு சில வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றுகின்றனர்.

தொடரில் இடம் பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

1. வாழைக்காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன.

வாழைத்தோப்பில் குயில்கள் கூவிக்கொண்டும் காகங்கள் கரைந்து கொண்டும் இருந்தன.

2. முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான்.

முருகன் சோறு உண்டு பால் பருகினான்.

3. கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை அமைத்தார்.

கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை வேய்ந்தான்.

4. வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக்குட்டியும் யானைக்குட்டியும் கண்டேன்.

வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குருளையும், யானைக் குட்டியும் கண்டேன்.

5. ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் பொந்துகள் அமைத்திருந்தன.

ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் வளைகள் அமைத்திருந்தன.

6. பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.

பனை ஓலையால் கூரை வேய்ந்திருந்தனர்.