பல பொருள் | ஒரு சொல் |
கா, கால், கான், கானகம், அடவி, அரண், ஆரணி, புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை, விடர், வியல், வனம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம். | காடு |
புணரி, ஆழி, சாகரம், சமுத்திரம், பெளவம், வேலை, முந்நீர், நீராழி, பெருநீர் | கடல் |
கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம் | கப்பல் |
ஓர் எண் (6), இயற்கையாக இருகரைகளுக்கு இடையில் நீர் ஓடும் பரப்பு, வழி, தணி | ஆறு |
கயம், வேழம், களிறு, பிளிறு, களபம், மாதங்கம், கைம்மா, வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, அரசுவா, அல்லியன், அனுபமை, ஆனை, இபம், இரதி, குஞ்சரம், வல்விலங்கு, கரி, அஞ்சனம். | யானை |
மணம், காவல், விரைவாக, கூர்மையான, வாசனை, காவல், கடி(த்தல்), சிறப்பு, களிப்பு, அச்சம் | கடி |
உறு, தவ, நனி | மிகுதி |
ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி | ஓவியம் |
கண்ணுள் வினைஞர், ஓவியப் புலவர், ஓவமாக்கள், கிளவி வல்லோன், சித்திரக்காரர், வித்தகர் | ஓவியம் வரைபவர் |
எழுதெழில் அம்பலம், எழுத்துநிலை மண்டபம், சித்திர அம்பலம், சித்திரக்கூடம், சித்திரமாடம், சித்திரமண்டபம், சித்திர சபை | ஓவியக் கூடம் |
இரக்கம், கருணை, தயவு, கிருபை, அபயம். | அருள் |
அகம், இல், இல்லம், உறையுள், கிருகம், மனை. | வீடு |
ஞானம், மதி, உணர்வு, உரம், மேதை, விவேகம் | அறிவு |
ஆகாரம், உண்டி, போஜனம், ஊன், அடிசில், தீனி. | உணவு |
பங்கயம், கமலம், அம்புயம், முளரி, புண்டரிகம், சரோருகம், மரை, பூ, தாவுகின்ற மான். | தாமரை |
திருமால், அரிதல், சிங்கம், வண்டு | அரி |
விடம், ஒரு மரம், மழைநீர், அம்புக்கூடு | ஆலம் |
கழுத்து, ஆபத்து, நிலப்பெரும் பிரிவு | கண்டம் |
பாத்திரம்,கப்பல், ஆபரணம். | கலம் |
அம்பு, அசையும்பொருள், பூமாலை | சரம் |
பனை. நா, பூமி | தாலம் |
அரசன், இடம், கணவன் | பதி |
பூமி, கற்பாறை, பார்த்தல் | பார் |
சங்கு, புற்று, வளைதல். | வளை |
அழகு, நகை, வரிசை, அணிகலன், உடுத்து, அலங்காரம், ஆபரணம். ஒழுங்கு, படைப்பிரிவு, அணிதல், | அணி |
உள்ளம், வீடு, இடம் | அகம் |
கணை, மூங்கில், நீர், மேகம் | அம்பு |
நாடகசாலை, சபை, போர்க்களம் | அரங்கம் |
சோறு, ஒருவகைப் பறவை | அன்னம் |
வீடு, மனம், உட்பகுதி | அகம் |
ஒலி, பாம்பு | அரவம் |
கடல் அலை, திரி | அலை |
படுக்கை, தடுத்தல், தழுவு | அணை |
நீங்கு, விளக்கு ஏற்றும் தானம் | அகல் |
சொல், அடி, திரை, வீட்டின் பகுதி | அறை |
கீழ்ப்பகுதி, பாதம், அடித்தல் | அடி |
வல்லமை, திறமை | ஆற்றல் |
மாலை, சந்தனம் | ஆரம் |
ஒருவகை விலங்கு, ஆடுதல் | ஆடு |
கண்ணாடி, தமிழ்மாதம், கூத்தாடி | ஆடி |
எண், நதி, வழி | ஆறு |
உயிர், நீராவி, உயிரெழுத்து | ஆவி |
ஆலமரம், நஞ்சு,கடல்,கலப்பை | ஆலம் |
புகழ், இணங்கு, பண் | இசை |
பூவிதழ், உதடு | இதழ் |
தாக்கு, வானிடி, முழக்கம், உறுதிச்சொல். | இடி |
கடவுள், நீர் இறைத்தல் | இறை |
ஒலிசெய், உணவு | இரை |
கொடு, பறவை, இரத்தல், அழிவு | ஈ |
எரு, ஞானம், மதில், வலிமை | உரம் |
எரு, ஞானம், மதில், வலிமை | உரம் |
உடுத்து, விண்மீன், ஒடக்கோல், அகமி | உடு |
சொல், தேய் | உரை |
மேலுறை, வசி | உறை |
ஆடை, ஒருவித இசைக்கருவி | உடுக்கை |
பருத்தல், ஊதுகருவி, குளிர்க்காற்று | ஊதை |
அன்னம், நீர்நாய், புளியமரம் | எகினம் |
காளை, ஆண் சிங்கம், மேலே செல் | ஏறு |
பாத்திரம், பன்றி | ஏனம் |
நீர் இறைக்கும் கருவி, உயர்வு | ஏற்றம் |
சந்தேகம், பிச்சை | ஐயம் |
கூந்தல்,ஓதுபவன், ஓந்தி | ஓதி |
ஆடை, கல்வி, கலைத்தல் | கலை |
நீக்கு, பயிருக்குக் கேடான புல் | களை |
காவல், காப்பு, கூர்மை, விரைவு | கடி |
கரும்பு, மூங்கில் | கழை |
பாவகை, சனி, துன்பம், வறுமை | கலி |
யானை, சாட்சி, அடுப்புக்கரி | கரி |
பாறைக்கல், படி, தோண்டு | கல் |
குரங்கு, கவிஞர், பாடல் | கவி |
தூண், நடுக்கம் | கம்பம் |
கலம், நாவாய் | கப்பல் |
காப்பாற்று, சோலை, காவடி, பூப்பெட்டி | கா |
பெருங்காயம், புண், உடல், நிலைபேறு | காயம் |
கருமை, மேகம் | கார் |
மரக்கிளை, உறவு | கிளை |
குடித்தல், குடும்பம், குடிப்பழக்கம் | குடி |
குழந்தை, சேய், குழவிக்கல் | குழவி |
கைக்குடை, தோண்டு | குடை |
சேர், உடம்பு, பறவைக்கூடு | கூடு |
கிரகம், புறம்கூறுதல் | கோள் |
சங்கு, கூட்டம் | சங்கம் |
வழி, வெப்பம் | சுரம் |
படை, தானை, கிழங்கு | சேனை |
கிள்ளி, வளவன், அபயன் | சோழன் |
பாதம், முயற்சி, காகிதம் | தாள் |
அலை, வெற்றிலை | திரை |
திங்கள், மாதம், கிழமை, மதி, பிறை, நிலவு, நிலா, அம்புலி | சந்திரன் |
உயர்ந்த அழகு, செல்வம், மேன்மை, இலக்குமி, மரியாதை அடை. | திரு |
அலை, விளக்குத் திரி | திரி |
துண்டு செய், ஆடை | துணி |
தைத்தல், மாதம் | தை |
பெண், தைத்தல் | தையல் |
சிரிப்பு, அணிகலன் | நகை |
கயிறு, வெட்கம், வட்டத்தின் நடுவில் வரையும் கோடு | நாண் |
விரும்பு, தேசம் | நாடு |
பாம்பு, துத்தநாகம் | நாகம் |
வாசி, படிக்கட்டு, அளக்கும் கருவி | படி |
கல்விக்கூடம், படுக்கை, தொழுமிடம் | பள்ளி |
பணிவு, அணிகலன் | பணி |
உலகம், காண் | பார் |
மேகம், பெருங்காற்று | புயல் |
தவறு, உயிர் தப்புதல் | பிழை |
பெண் யாணை, பிடித்துக்கொள் | பிடி |
அறிவு, நிலா | மதி |
சோம்பல், இற | மடி |
வீரம், பாவம் | மறம் |
திருமணம், கலத்தல் | மணம் |
பெரிய, விலங்கு, மாமரம் | மா |
பொழுது, தார் | மாலை |
குற்றம், தீது | மாசு |
தலை, செய்துமுடி, கட்டு | முடி |
உண்மை, உடம்பு | மெய் |
மலை, தீட்டு, எல்லை | வரை |
வலிமை, நோவு | வலி |
யானை, கோழி, கடல், சங்கு | வாரணம் |
பதில், காளை | விடை |
புலி, வேங்கைமரம் | வேங்கை |
யானை, கரும்பு | வேழம் |
ஞாயிறு, பகலவன், கதிரவன், ஆதவன், பரிதி, அருக்கன், வெய்யோன், அனலி, இரவி | சூரியன் |
ஆகாயம், வான், விசும்பு, விண்ணகம், விண் | வானம் |
தீ, அக்கினி, அழல்,தழல், கனல் | நெருப்பு |
கவி, கவிதை, செய்யுள், பா, பாடல்,கீதம் | பாட்டு |
ஏடு, நூல், இழை, பனுவல் | புத்தகம் |
உலகம்,புவி,பார், வையகம், அகிலம், தரணி, குவலயம் | பூமி |
துயில், உறக்கம், துஞ்சல், தூக்கம் | நித்திரை |
தேகம், உடம்பு, சரீரம், மேனி, யாக்கை | உடல் |
தொனி, சத்தம், அரவம், ஓசை, ஆரவாரம் | ஒலி |
கதிரவன், வெளிச்சம், விளக்கு. | ஒளி |
கோபம். சீற்றம், காய்தல், முனிதல் | சினம் |
மனையாள், இல்லாள், தலைவி, கிழத்தி | மனைவி |
மெய், சத்தியம், வாய்மை | உண்மை |
சிரம், உச்சி | தலை |
சர்ப்பம், அரவம், பணி | பாம்பு |
மகவு, சேய், பிள்ளை, குழவி, சிசு. மழலை | குழந்தை |
புன்னகை, நகைப்பு, முறுவல் | சிரிப்பு |
மன்னன், வேந்தன், கோன், கோ | அரசன் |
காடு, ஆரணியம், கானகம், அடவி | வனம் |
ஆவல், விருப்பம், அவா | ஆசை |
பழனம், கழனி, கமம் | வயல் |
சமர், அமர், போர், யுத்தம் | சண்டை |
அன்னம், சாதம், அடிசில், உணவு, ஊன், ஆகாரம், சாப்பாடு. | சோறு |
குருதி, உதிரம், சோரி, கறை | இரத்தம் |
அசுவம், துரகம், புரவி, மா,பரி | குதிரை |
தண்ணீர், புனல், சலம், அப்பு | நீர் |
அபராதம், குற்றம், தண்டம் | தண்டனை |
எழில், வனப்பு, கவின், வடிவு, அணி | அழகு |
இல்லம், மனை, அகம், உறையுள் | வீடு |
சியம், கேசரி, மடங்கல், அரி | சிங்கம் |