பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

துன்பம் வெல்லும் கல்வி


ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ 
ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே 
நாட்டின் நெறிதவறி நடந்து விடாதே – நம் 

நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே

மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது – பண்பு

முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது
மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது – தன்
மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது

துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் – நீ

சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும் 
வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் – அறிவு
வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும்

வெற்றிமேல் வெற்றிவர விருதுவர பெருமைவர

மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேண்டும்
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்.

1. காலம்- 13.04.1930  –  08.10. 1959 .

2. பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் ஊரில் பிறந்தவர்.

3. 'துன்பம் வெல்லும் கல்வி' –பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

4. எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

5. திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.

6. மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

7. 'செய்யும் தொழிலே தெய்வம்' என்னும் பாடலை பாடியவர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
செய்யும் தொழிலே தெய்வம்

செய்யும் தொழிலே தெய்வம் – அந்தத் 
திறமைதான் நமது செல்வம்

கையும் காலுந்தான் உதவி – கொண்ட

கடமைதான் நமக்குப் பதவி

பயிரை வளர்த்தால் பலனாகும் – அது

உயிரைக் காக்கும் உணவாகும்

வெயிலே நமக்குத் துணையாகும் – இந்த

வேர்வைகள் எல்லாம் விதையாகும்
தினம் வேலையுண்டு குல மானமுண்டு
வருங்காலமுண்டு அதை நம்பிடுவோம்.

காயும் ஒருநாள் கனியாகும் – நம்
கனவும் ஒருநாள் நனவாகும்
காயும் கனியும் விலையாகும் - நம்
கனவும் நினைவும் நிலையாகும் – உடல்
வாடினாலும் பசி மீறினாலும்
வழி மாறிடாமலே வாழ்ந்திடுவோம்.

Enable Notifications OK No thanks