உருத்திரங் கண்ணனார்

உருத்திரங் கண்ணனார்


கடியலூர் உருத்திரங் கண்ணனார்


கலங்கரை விளக்கம்


வானம் ஊன்றிய மதலை போல 
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி 
விண்பொர நிவந்த வேயா மாடத்து 
இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி 
உரவுநீர் அழுவத்து ஒடுகலம் கரையும் 
துறை ... ....
– கடியலூர் உருத்திரங் கண்ணனார்


1. கடியலூர் உருத்திரங் கண்ணனார் சங்ககாலப் புலவர்.

2. ஊர் - கடியலூர்.

3. பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியவர் – கடியலூர் உருத்திரங் கண்ணனார்.

4. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன்–  தொண்டைமான் இளந்திரையன்.

5. வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.

6. பத்துப்பாட்டு நூல்கள்
  • திருமுருகாற்றுப்படை
  • பொருநராற்றுப்படை
  • பெரும்பாணாற்றுப்படை
  • சிறுபாணாற்றுப்படை
  • முல்லைப்பாட்டடு
  • மதுரைக்காஞ்சி
  • நெடுநல்வாடை
  • குறிஞ்சிப்பாட்டு
  • பட்டினப்பாலை
  • மலைபடுகடாம்