அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல்

அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல்

அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல்

(எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு) 

எ. கா: 

•  நான் காட்டிற்குச் சென்றேன். அதனால் புலியைப் பார்த்தேன்.

•  மாலைநேரம் முடியும் வரை விளையாடுவேன்.

•  தேர்வு முடிந்த பின்பு சுற்றுலா செல்லலாம்

(Related Topic Covered In Samacheer Books given below)

சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.

(எனவே, ஏனெனில், அதனால், ஆகையால், அதுபோல, இல்லையென்றால், மேலும்)

1. காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்வதை விரும்பாதவர். __________ அவர் எளிமையை விரும்பியவர்.

விடை : ஏனெனில்

2. நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும். __________ துன்பப்பட நேரிடும்.

விடை : இல்லையென்றால்

3. குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது. __________ காக்கையின் கூட்டில் முட்டையிடும்.

விடை : ஆகையால்

4. அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். __________ மரங்கள்தான் மழைக்கு அடிப்படை.

விடை : ஏனெனில்

5. பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன். __________ பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.

விடை : எனவே

6. தமிழகத்தில் மழை பெய்துவருகிறது. __________ இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு.

விடை : மேலும்

இணைச்சொற்களை இட்டு நிரப்புக.

( மேடுபள்ளம், ஈடுஇணை, கல்விகேள்வி, போற்றிப்புகழப்பட, வாழ்வுதாழ்வு, ஆடிஅசைந்து )

1. சான்றோர் எனப்படுபவர் __________ சிறந்தவர் ஆவர்.

விடை : கல்விகேள்வி

2. ஆற்று வெள்ளம் __________ பாராமல் ஓடியது.

விடை : மேடுபள்ளம்

3. இசைக்கலைஞர்கள் _________ வேண்டியவர்கள்.

விடை : போற்றிப்புகழப்பட

4. தமிழ் இலக்கியங்களின் பெருமைக்கு _________ இல்லை

விடை : ஈடுஇணை

5. திருவிழாவில் யானை __________ வந்தது.

விடை : ஆடிஅசைந்து